செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

அ கா பெருமாள் - வயக்காட்டு இசக்கி



                         எங்கள் வீட்டு மணி நாய் ( நாய்னு சொல்லகூடாது அம்மா வோட இன்னொரு பையன்னு தான் சொல்லணும்  அவ்வளவு நெருக்கம்). என்ன தான் நான் சோறு போட்டு  விளையாடினாலும் , அம்மா சொன்ன பேச்சைத்தான் கேட்கும். நான் சோறு போட்டாலும் அம்மா இருந்தால் அவளை பார்ப்பான், அவள் சாப்புடறா  என்று சொன்னால் தான் சாப்பாட்டில் வாய் வைப்பான். சில முறை அம்மா ஒன்றும்  சொல்லாமல் நின்றால் அவளையே பார்ப்பான், அவளது ஆணைக்காக. தெரியாதவர்கள் யார் வந்தாலும் குரைத்து அவர்களை அலற விடுவதில் அலாதி பிரியம் அவனுக்கு . அப்படிபட்டவன் குடுகுடுப்பைகாரன் (குறி சொல்பவன்)  வந்தால் அமைதியாக கட்டிலுக்கு அடியில் பதுங்குவான் ஏன் என்று பல முறை யோசித்தும் பதில் தெரியவில்லை. ஒரு முறை அவனிடமே கேட்டேன்.  அத்தா உத்தரவு இருந்தாதான் அந்த வீட்டுகே வருவோம். அப்படி வரும் போது எந்த ஆபத்தும் நேராமல் அம்மா பார்த்துகொள்வாள் என்று என் நெற்றியில் திருநீர் வைத்து டகால்டி உட்டு சென்றான். இது நடந்தது என் பத்து வயதில்.
அதற்கான பதில் இருபது வருடம் கழித்து (ரொம்ப லேட்)  அ கா பெருமாளின் வயல் காட்டு இசக்கி படித்த போது தான் தெரிந்தது.

 . நேற்று  அ கா பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி படிதேன் . அவர் ஒரு researcher ஆகதான் தணுர்மலயான் ஆலயம் புத்தகம் எனக்கு காட்டியது . ஆனால் அவரும் ஒரு அற்புதமான  கதை சொல்லி என்று இந்த வயக்காட்டு இசக்கி எனக்கு காட்டியது .
ராபாடிகளை   பற்றியான கதையையும் , அவர்களின் வாழ்க்கையையும் ஒரு கதை போலவே சொல்லி செல்கிறார் .
ஓநாயின் மலத்தை தேய்த்து குறி சொலவருவதால் தான் அவர்களின் அருகில் நாய் வருவதில்லை மற்றும் ராபாடிகளை  உழவுதொழிலை வாழ்த்தி வெகுமதி பெரும் பாடகர்கள்  போன்ற தகவல்களையும் தனக்கே உரித்த முறையில் கல்வெட்டுகளின் சான்றுடன் சொல்லி செல்கிறார் . 
ராபாடியின் பாட்டில் இருந்து பல நெல்வகைகளை பட்டியல் இடுகிறார் .  அப்படியே நெல்வயல்களை தாக்கும் நோய்களை பற்றியும் அதை தடுபதற்கான முறைகளையும் சொல்லுகிறார்.
          
  இசக்கியின் கதையை சொல்லி முடிக்கும்போது  அவள்  கணவன் மேடான அவள் வயிற்றை தடவி தடவி அழுதான் என்று அவர் சொல்லி செல்லும் இடம் ஒரு உச்சகட்ட இலக்கியமாக எனக்கு பட்டது . ( அந்த அளவுக்கு எனக்கு ரசனை குறைவோ ? (: (: ).    எப்பொதும் சிறுகதையோ அல்லது நாவலோ படித்து முடித்த பின் அதில் வரும் காட்சிகள் நம் மனதில் ஓடிகொண்டே இருக்கும்.  இதுவும் படித்ததில் இருந்து ஓடிகொண்டே இருக்கிறது .  இரவெல்லாம் அவன் அவள் வயிற்றை தடவிய காட்சியே கனவாக ஓடியது .
முடிக்கும் போது  இப்படியாக வயல்வெளியை  காப்பாற்ற உயிரை விட்டவர்கள் தெய்வம் ஆனார்கள். ஆபுர்வமான நெல்வகைகளை பயிரிட்டு பரிமாறி கொண்டவர்கள் மட்டும் மனிதராய் செத்து போனார்கள் என்று முடித்து ஒரு research முடிந்த உடன் researchers எல்லாம் ஒரு conclusion கொடுப்பார்கள் என்ற நியதியையும் காப்பாற்றி விட்டார்  .
இதை படித்த போது என் தாத்தா என்னை அவர் மடியில் உட்காரவைத்து கதை சொல்லிய காலம் மனதில் தேர் ஓடுவதுபோல் ஓடியது. அவரும் தகவல்களை சொல்லும் போது  இடையில் கதையை போட்டு அவர் சொன்னது கதையா என்று நினைபேன் .  என் தாத்தாவிடம் பேசியது போலவே இருந்தது இதை படித்து முடித்தபின் .

ஜெயமோகன் அறம் சிறுகதைகளை போலவே எனக்கு இந்த வயக்காட்டு இசக்கியும் close to heart  .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக