செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

மரண ஓசை






தற்கொலையின்  வாக்குமூலம்
தண்டவாளத்தில் ரயிலடியின்
கால்வைக்கும் மரண ஓசை
செவி முழுதும் நிரப்பி
மேல் எழும் ஆன்மாவின்
இசையாய் .
குருதி குளங்களை நிரப்பி
பிரபஞ்ச நாதங்களை
மீட்டியபடி


----
மீட்பராய் வரும் பறவை,
காலை பனித்துளி , குழந்தையின் சிவபேரிய
விரல் , தெருவில் விளையாடும் சிறுவனின் நாய் ,
அன்னையின் அடையாளமற்ற உருவம் ,
சிலுவைகளை சுமந்தபடி .

------
மழைத்துளி விழுந்த நதி 
முழுதும் பூக்களாய்   
ஓடிகொண்டிருகிறது
இன்னும் பூக்களை வேண்டியபடி ,
கருத்தரிக்கும் நாள் வரும்
என்று எதிர்பார்த்து கரையோரம் 
பூக்கள்  .

------------
பிரபஞ்சம் முழுதும் கரு மௌனமாய் 
ஓடிகொண்டிருக்கிறது.
மனம் முழுதும் எண்ணமாய் 
ஓடிகொண்டிருக்கிறது
நதி முழுதும் நீராய்
ஓடிகொண்டிருக்கிறது
கடலை எதிர்பார்த்து


--------------
பிரபஞ்ச கூடாறத்தில் 
இசையை இறகு
முழுதும் நிரப்பி எழுதி கொண்டிருகிறது 
பறவை ,
தன போக்கில் போய் கொண்டிருகிறது 
 நதி
நிலவொளியின் தடம் பார்த்து
சிறகடிக்கிறது  விட்டில்
பூச்சி
காற்றின் தீராத பக்கங்களில் ,
வரைந்து கொண்டிருகிறது
தென்றல் 

--------------
கருத்த பேரண்டம் வெடித்து
புல்லாய் ,
புல் வெடித்து பறவை
மேயும் விதையாய்
பறவை வெடித்து
மீண்டும் பிரபஞ்சம் நோக்கி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக